BREAKING: கிராமப்புறங்களில் கடைகளுக்கு உரிமம் தேவையில்லை… சற்றுமுன் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!

By Nanthini on ஆடி 31, 2025

Spread the love

தமிழகத்தில் கிராமங்களில் தொழில் தொடங்க சிறு வணிகர்களுக்கு உரிமம் தேவையில்லை என்று தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. கிராமப்புறங்களில் இயங்கும் டீக்கடைகள் முதல் திருமண மண்டபங்கள் வரை ( 250 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை) கட்டணம் செலுத்தி தொழில் உரிமம் பெறுவது கட்டாயம் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இப்படியான நிலையில் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கிராமப்புற பஞ்சாயத்து சிறு குறு கடைகளுக்கு உரிமம் பெற தேவையில்லை என்று சற்றுமுன் அறிவித்துள்ளது.