சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வருபவர்தான் நடிகை அகிலா. மலர்கள், ரோஜா கூட்டம், சிவசக்தி, உதிரிப்பூக்கள், திருமதி செல்வம், கல்யாண பரிசு, முந்தானை முடிச்சு ,முள்ளும் மலரும் போன்ற பல 40க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார் .தற்பொழுது கர்ப்பமாக இருப்பதால் சீரியலிலிருந்து விலகி இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், சீரியலில் 27 வயதில் ஒரு பொண்ணு இருக்கா. அவள் பெயர் அஸ்வதி. மலர் சீரியல் ஹீரோயின் அவள் தான். அவளும் எனக்கு நண்பர்களும் சேர்ந்து வளைகாப்பு செய்தார்கள். என்னுடைய குடும்பம் என்னுடைய தனிப்பட்ட விருப்பம். அதை வெளி உலகில் யாரும் தெரிந்து கொள்ள நான் விரும்புவது கிடையாது.
அதனால்தான் சமூக வலைதளங்களில் என்னுடைய குடும்பம் குறித்து எந்த பதிவும் வெளியிடவில்லை. அதே சமயம் எனக்கு நடிப்பு வாழ்க்கையில் என்னுடைய குடும்பத்தினர் சப்போர்ட் அதிகம். நான் மருத்துவராக வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் முடியவில்லை இப்போது அகாடமி டாக்டராக முயற்சித்து வருகிறேன். என்னுடைய கணவர் எனக்கு எல்லா விதத்திலும் சப்போர்ட்டாக இருக்கிறார். உங்கள் வீட்டில் டாக்டராக வேண்டுமென்று நினைத்தது நடக்கவில்லை. அதனால் நீ இப்படி டாக்டர் பட்டம் வாங்கி விடு என்று சொல்லி அவர் தான் என்னை பிஎச்டி படிக்க வைக்கிறார். கர்ப்பமாக இருந்தாலும் அவர்தான் என அழைத்து சென்று மீண்டும் வீட்டிற்கு கூட்டி வருகிறார் என்று கூறியுள்ளார்.
