பெற்றோர்களே உஷார்… பாத்திரத்தில் சிக்கிக்கொண்ட 3 வயது சிறுவனின் தலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on ஆடி 27, 2025

Spread the love

ஒடிசா மாநிலத்தில் மலகான் கிரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பிரதீப் தித்தமர் என்பவர் சந்தையில் இருந்து புதிய ஸ்டீல் பாத்திரம் ஒன்றை வீட்டிற்கு வாங்கி வந்துள்ளார். அவர் வாங்கி வந்த பாத்திரத்துடன் அவருடைய மூன்று வயது மகன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அந்த பாத்திரத்தை சிறுவன் தலையில் வைக்க முயன்ற போது திடீரென்று அதற்குள் தலை சிக்கிக்கொண்டது. பெற்றோர் பலமுறை முயற்சி செய்தும் சிறுவனின் தலையை வெளியே எடுக்க முடியவில்லை.

உடனே சிறுவனை தீயணைப்பு நிலையத்திற்கு அழைத்துச் சென்று உதவி கேட்ட நிலையில் சம்பவம் சிக்கலானதால் தீயணைப்பு வீரர்கள் சிறப்பு கருவிகளை பயன்படுத்தி சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கடுமையாக உழைத்து பாத்திரத்தை வெட்டி சிறுவனை பாதுகாப்பாக மீட்டனர். இந்த மீட்பு நடவடிக்கையின் போது சிறு உனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. குழந்தைகள் தானே பாத்திரத்தை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று பெற்றோர்கள் அசால்டாக இருக்காமல் இது போன்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபடும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும் என்றும் தீயணைப்புத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.