500 பேரை கொத்தாக தூக்கிய திமுக… ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின்… செம அப்செட்டில் இபிஎஸ்…!

By Nanthini on ஆடி 27, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமைய வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்க மறுப்பக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என உறுதியாக உள்ளது. இருந்தாலும் தங்கள் கூட்டணி பலமாக உள்ளதால் வெற்றி நமக்கு தான் என்று முதல்வர் ஸ்டாலின் உள்ளார்.

இருந்தாலும் மேலும் பல நிர்வாகிகளை தன் கட்சியில் இணைக்கும் பணிகளில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டு வரும் நிலையில் பாமக மற்றும் அதிமுக பலமாக உள்ள தர்மபுரி நலம் பள்ளி ஒன்றியத்தில் இருந்து புதிதாக 500 பேரை திமுகவில் இணைத்துள்ளனர். கடந்த தேர்தலில் ஐந்து தொகுதிகளையும் கோட்டை விட்டதால் இந்த முறை வெற்றி முனைப்போடு திமுகவினர் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாற்றுக் கட்சியினர் 300 பேர் திமுகவில் இணைந்த நிலையில் இது பேசு பொருளாகியுள்ளது. இதனால் அதிமுகவும் அடித்து ஆட தயாராகி வருகிறதாம்.