உயிர் காக்கும் ஆம்புலன்ஸில் வைத்து… கதற கதற இளம் பெண்ணை பலாத்காரம் செய்த ஊழியர்கள்.. உச்சகட்ட கொடூரம்…!

By Nanthini on ஆடி 27, 2025

Spread the love

பீகார் மாநிலத்தில் ஒரு உச்சகட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள போத்கயா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மைதானத்தில் கடந்த ஜூலை 24ஆம் தேதி போலீஸ் பணிக்கான உடல் தகுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் பங்கேற்ற இளம் பெண் ஒருவர் ஓட்ட பந்தயத்தின் போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் ஊழியர்களான டிரைவர் வினய் குமார் மற்றும் உதவியாளர் அஜித்குமார் ஆகியோர் அந்த இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்த நிலையில் உடனே வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த இரண்டு நபர்களையும் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் விரைவாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர் காக்கும் ஆம்புலன்சில் இளம் பெண்ணுக்கு இப்படி நடந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.