நீங்க தினமும் உங்க டூத் பிரஷை பாத்ரூமில் வச்சிருக்கீங்களா?… அப்போ இந்த நோய்கள் கண்டிப்பா வரும்…!

By Nanthini on ஆடி 27, 2025

Spread the love

காலை எழுந்ததும் அனைவரும் செய்யக்கூடிய முதல் வேலை பல் துலக்குவது தான். வாயை சுத்தமாக வைப்பதற்கு தான் தினம்தோறும் தவறாமல் பல் துலக்குகிறோம். ஆனால் அதுவே பல கிருமி தொற்றுகளுக்கு காரணமாகலாம். அதாவது நீங்கள் பயன்படுத்தக்கூடிய டூத் பிரஷில் பல கிருமிகள் ஒளிந்திருக்கும். நீங்கள் பயன்படுத்தக்கூடிய டூத் பிரஷ்சை கழிவறையிலேயே வைத்து விடுகிறீர்கள் என்றால் இனிமேல் அந்த தவறை செய்யாதீர்கள். பெரும்பாலானோர் செய்யக்கூடிய தவறு கழிவறைக்கு அருகிலேயே டூத் பிரஷ்சை வைத்து விடுவது தான். நாம் பிரஷ் செய்யும்போது மிகவும் ஆபத்து வாய்ந்த பாக்டீரியாக்கள் அங்குள்ள காற்றில் பரவி அருகில் உள்ள பொருட்கள் மீது படர வாய்ப்புள்ளது. அந்த கிருமிகள் பெருகி நோயை பரப்புகின்றன.

அதனை நாம் பயன்படுத்தும் போது கிருமித் தொற்றுக்கு ஆளாகிறோம். பிரஷ்சை பயன்படுத்திவிட்டு அப்படியே ஈரமாக வைத்து விடுகிறோம். பலர் பிரஸ்ஸின் மேல் பகுதியை மூடி விடுகிறார்கள். இதுவும் கிருமிகள் வளர்வதற்கு ஏற்றது தான். டூத் பிரஷ்சை பயன்படுத்தும் முன்பு கழுவ வேண்டும். அதனைப் போலவே பயன்படுத்திய பிறகும் காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும். குறிப்பாக கழிவறைக்கு வெளியே தான் நல்லது. அது மட்டுமல்லாமல் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நீங்கள் பயன்படுத்தக்கூடிய டூத் பிரஷ்சை மாற்றிக்கொள்ள வேண்டும். அதன் துளைகள் மற்றும் மென்மையான நூல்களில் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் வளர அதிகம் வாய்ப்பு இருக்கும். எனவே இனிமேல் டூத் பிரஷை கழிவறையில் வைப்பதை தவிர்ப்பது பல நோய்களிலிருந்து நமக்கு பாதுகாப்பு கிடைக்கும்.