தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டராக வலம் வருபவர் சூப்பர் சுப்பராயன். இவருடைய மகன் திலிப் சுப்பராயன். தற்போது சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். தமிழ், தெலுங்கு நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இவர் பணியாற்றியுள்ளார். ஹரி ஹர வீர மல்லு படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரும் இவர் தான். இந்த நிலையில் இவர் மீது இன்ஸ்டாகிராம் பிரபலம் இலக்கியா பரபரப்பு புகார் அளித்துள்ளார் . அதனை இன்ஸ்டாகிராம் ஸ்டோரிலும் ஷேர் செய்துள்ளார். அதில், “என்னுடைய சாவிற்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மட்டும்தான் காரணம். என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டான்.
ஆறு வருடமாக அவனுடன் இருந்திருக்கிறேன். நிறைய பொண்ணுங்க கூட பழக்கம். அதைக் கேட்டால் என்னை போட்டு அடிக்கிறான். நானும் பொறுத்து பொறுத்து என்னால் முடியவில்லை. இதுவுமே நான் போட்டா என்னை அடி அடின்னு அடிப்பான்” என்று ஸ்டோரில் குறிப்பிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் உள்ள வீட்டில் இலக்கியா தற்கொலை முயற்சி செய்துள்ளார். அதிக ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற அவரை போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
