கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே தோட்டம் அஞ்சு மலை கிராமத்தில் மாதேஷ் (35) என்ற கூலி தொழிலாளி வசித்து வருகின்றார். அதே பகுதியை சேர்ந்த மாதப்பன் மனைவி நாகம்மா (34) என்பவரையும் இவரையும் கடந்த 15 நாட்களாக வீட்டில் காணவில்லை.இருவரையும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்த நிலையில் எங்கு தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் இவர்களை தேடி வந்த நிலையில் மஞ்சி கிராமத்தை ஒட்டி வனப்பகுதியில் அழகிய நிலையில் மாதேஷின் உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து அதே வனப்பகுதியில் வேறு ஒரு பகுதியில் அழகிய நிலையில் நாகம்மாவின் உடலை நேற்று போலீசார் மீட்டனர். இருவருடைய உடலையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது மாதேசுக்கும் நாகம் ஆகும் தவறான கள்ளத்தொடர்பு இருந்து வந்த நிலையில் இருவரும் வனப்பகுதியில் மெய் மறந்து உல்லாசமாக இருந்துள்ளனர். மனைவியை காணாமல் வனப்பகுதிக்கு தேடி வந்த மாதப்பன் நேரில் என்ன பார்க்க கூடாதோ அதை பார்த்து விட்டார்.
தனது மனைவி நாக மாவை மாதப்பன் கண்டித்த நிலையில் கோபித்துக் கொண்டு அவர் தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பிறகு அங்கிருந்து அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பே திடீரென மாயமாகிய நிலையில் வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து வனப்பகுதியில் மரத்தில் சேலையில் மாதேஷ் மற்றும் நாகம்மா வெவ்வேறு இடங்களில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
