7 வயது மகளின் கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை… அதிர்ச்சி தரும் காரணம்… தமிழகத்தை உலுக்கும் பயங்கர சம்பவம்…!

By Nanthini on ஆடி 23, 2025

Spread the love

சென்னையை அடுத்த ஆலந்தூர் எம் கே என் சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு பெண் ஒருவர் நேற்று வந்திருந்த நிலையில் தன்னுடைய தம்பியான சென்னை அயனாவரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (38) அங்கு அறை எடுத்து தங்கி உள்ளதாகவும், அவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தனக்கு தகவல் வந்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த விடுதியின் மேலாளர் தொடர்ந்து விசாரித்த போது சதீஷ்குமார் என்பவர் அவரது ஏழு வயது குழந்தையுடன் நேற்று முன்தினம் இரவு அரை எடுத்து தங்கி இருந்ததை அறிந்து கொண்டார். உடனே ரூமுக்கு சென்று பார்த்தபோது சதீஷ்குமார் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அவருக்கு அருகில் ஸ்டெபி ரோஸ் என்ற ஏழு வயது குழந்தை கழுத்து அறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரித்த நிலையில் தற்கொலைக்கு முயன்ற சதீஷ்குமாருக்கும் ரெபேக்கா என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் குடும்ப தகராறு காரணமாக நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடப்பதாக கூறப்படுகிறது. இதனால் தன்னுடைய ஏழு வயது மகள் ஸ்டெபி ரோஸை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மனைவி கணவர் சதீஷ்குமார் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் குழந்தையை தன்னிடம் இருந்து பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில் ஆலந்தூரில் உள்ள தங்கும் விடுதிக்கு மகளை அழைத்து சென்று தங்க வைத்த சதீஷ்குமார் மகளின் முகத்தில் தலையணையை வைத்து அமுத்தியதும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

   

மேலும் அதே கத்தியால் தன்னுடைய கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்று உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு போலீசார் சிகிச்சைக்காக அழைத்துச் சென்று நிலையில் அங்கு அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் கொலைக்கு காரணமாக இருந்த தந்தை சதீஷ் மற்றும் அவருடைய தாயாரை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை என்று கூறியும் உடனடியாக அவர்கள் இருவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் குழந்தையின் சடலத்தை வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.