தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. எப்படியாவது மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் நிலைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். கட்சியிலும் களையெடுக்கும் பணிகளை தொடங்கியுள்ள முதல்வர் ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுடனும் தொடர் ஆலோசனையில் இருந்து வருகிறார். நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டது.
இப்படியான நிலையில் ஊழல் புகாரில் சிக்கிய கவுன்சிலர்கள் தாமாக ராஜினாமா செய்யாவிட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவீர்கள் என்று திமுக தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரையில் 200 கோடி முறைகேடு சர்ச்சை திமுகவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இப்படியான நிலையில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் முறைகேடு புகாரில் சிக்கியவர்கள் பதவி விலக முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இந்த உத்தரவை திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
