நீலகிரி மாவட்டம் தவிட்டு மேடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி மோனிஷாவுடன் காரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் இருந்த நாவல் மரத்தில் பழங்கள் இருப்பதை பார்த்ததும் தனது மனைவிக்கு இது பிடிக்கும் என்று செந்தில் குமாருக்கு எண்ணம் வந்துள்ளது. இதனால் செந்தில்குமார் காரை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி மரத்தில் ஏறி பழங்களை பறித்தார்.
கொஞ்சம் பழங்களை பறித்த பிறகு திடீரென்று நிலை தடுமாறி அவர் கீழே விழுந்த நிலையில் அங்கிருந்த பாறை மீது விழுந்ததால் செந்தில்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே தன் மனைவி கண் முன்னே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மனைவிக்கு ஆசை ஆசையாக பணம் பறிக்கச் சென்று அவர் கண் முன்னே கணவர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
