திருமணம் ஆகி 78 நாட்களே ஆன நிலையில் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா தற்கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க அவருடைய குடும்பத்தினார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். மேலும் ரிதன்யாவின் மாமியாரை காவலில் எடுத்து விசாரிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ரிதன்யாவின் கணவரும், மாமனாரும் ஜாமீன் கோரி திருப்பூர் மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
