விவசாயம் செய்யும் தோனி… பண்ணையில் வளரும் ஒரு கிலோ கோழி விலை இவ்வளவா?.. அப்படி என்ன இருக்கு அதுல..!

By Nanthini on ஆடி 3, 2025

Spread the love

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்து தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகின்றார். இவர் தற்போது தனது சொந்த ஊரான ராஞ்சியில் ஓய்வு எடுத்து வரும் நிலையில் அவரதோனி பண்ணை வீட்டிற்கு கைலாசபதி என்று பெயர் உள்ளது. அங்கு தோனி விவசாய பயிர்களை பராமரித்து வரும் நிலையில் 43 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக அந்த பண்ணை நிலம் உள்ளது. அங்கு தக்காளி, பீன்ஸ் மற்றும் ஸ்ட்ராபெரி உள்ளிட்ட பயிர்கள் விளைகிறது. இதுபோன்று சுமார் 50 பசுக்கள் தோனியின் பண்ணையில் வளர்க்கப்படுகின்றது.

அவற்றிலிருந்து கிடைக்கும் பால் அங்கிருக்கும் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றது. இதனைத் தவிர கடக்நாத் என்று அழைக்கப்படும் கருப்பு நிற கோழிகள் தோனியின் பண்ணையில் வளர்க்கப்படுகின்றன. இயற்கையான முறையில் இந்த கோழிகள் வளர்க்கப்படும் நிலையில் இதன் இறைச்சி அதன் மருத்துவ குணங்களுக்காக ஒரு கிலோ 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.