BREAKING: போதைப்பொருள் வழக்கு… ஸ்ரீகாந்தை தொடர்ந்து போலீசில் சிக்கிய கிருஷ்ணா.. அடுத்த பரபரப்பு…!

By Nanthini on ஆனி 25, 2025

Spread the love

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரில் நடந்த அடிதடி வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் கைது செய்யப்பட்டார். அவரின் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்த காவல்துறையினர் அவருக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலோடு தொடர்பு இருப்பதை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து அவர் போதைப்பொருள் விற்பனை செய்த சிலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கையின் போதை பொருள் வாங்கி பயன்படுத்துவது தெரிய வந்தது. பிறகு அவரை அழைத்து விசாரித்த போது அவர் ஒப்புக்கொள்ளாததால் ரத்த பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது.

நடிகர் ஸ்ரீகாந்த் கைது.. அடுத்து சிக்கும் கழுகு பட நடிகர் கிருஷ்ணா.. சம்மன்  அளித்த போலீஸ்! | Actor Krishna to be Summoned in Drug Case Linked to Actor  Srikanth's Arrest - Tamil ...

   

இதனைத் தொடர்ந்து ஸ்ரீகாந்தை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் தற்போது அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து போதைப்பொருள் விவகாரத்தில் கழுகு படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு உள்ளது தெரிய வந்தது. அவருடைய பணப்பரிவர்த்தனை மற்றும் செல்போன் தொடர்புகளை வைத்து கிருஷ்ணாவை விசாரிக்க திட்டமிட்டனர். வழக்கு குறித்து விசாரணை நடத்த கிருஷ்ணாவை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் ஸ்விச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

   

யோசிச்சு பார்த்தா கணக்கு சரியா இருக்கும்: நடிகர் கிருஷ்ணா | யோசிச்சு  பார்த்தா கணக்கு சரியா இருக்கும்: நடிகர் கிருஷ்ணா - hindutamil.in

 

இதனைத் தொடர்ந்து கிருஷ்ணா விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சமன் அனுப்பப்பட்டது. கேரளாவிற்கு தப்பி சென்றதாக தகவல் வெளியானது. அவரை பிடிப்பதற்காக ஐந்து தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர். இப்படியான நிலையில் போலீசில் சிக்கியுள்ள கிருஷ்ணாவிடம் துருவி துருவி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானால் அவர் கைது செய்யப்படுவார். தற்போது கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ள நிலையில் பல அதிர்ச்சி நிறைந்த தகவல்கள் வெளிவரும் என தெரிகிறது.