தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க இன்றுவரை போராடிக் கொண்டிருப்பவர் தான் நடிகர். தளபதி விஜயின் சித்தப்பா மகனான இவர் தமிழ் சினிமாவின் கற்க கசடற என்ற திரைப்படம் மூலமாக தான் நடிகராக அறிமுகமானார். அதற்கு முன்பு கடந்த 1991 ஆம் ஆண்டு அழகன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இவர் நடிகராக அறிமுகமானது 2005 ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற திரைப்படம் மூலமாக தான்.

அதனைத் தொடர்ந்து இவருக்கு சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்த நிலையில் நினைத்து நினைத்து பார்த்தேன், முதல் கனவே, நெஞ்சத்தைக் கிள்ளாதே, எங்கள் ஆசான், முத்துக்கு முத்தாக, பாண்டியநாடு உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் என்னதான் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவர் சினிமாவில் தனக்கான ஒரு அங்கீகாரத்தை இன்று வரை பெறவில்லை.
![]()
தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு மெல்ல மெல்ல சினிமாவில் உயர்ந்து வருகின்றார். இப்படியான நிலையில் நடிகர் விக்ராந்தின் மனைவி பிரபல சீரியல் நடிகை என்ற தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது நடிகர் விக்ராந்த் கடந்த 2009 ஆம் ஆண்டு மானசா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் மலையாள நடிகை கனகதுர்காவின் மகள் ஆவார். பணம் பெரும் நடிகையான கனகதுர்காவின் மகள் தான் மானசா.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பான உதிரிப்பூக்கள் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைப் போலவே மலையாளத்தில் ஒளிபரப்பான மக்களுடே அம்மே என்ற சீரியலில் நடித்துள்ளார். இவர் நடிகர் விக்ரம் கை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது விக்ராந்தின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
