வீட்டில் முதியவர்கள் இருந்தால் இந்த திட்டத்தில் சேருங்க… அதிக வட்டியுடன் நல்ல வருமானம் கிடைக்கும்…

By admin on தை 30, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்வது படத்தை சேமிப்பது போன்றவற்றில் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக முதியோர்கள், சூப்பர் சீனியர் சிட்டிசன் ஆகியோர்களை ஊக்குவிக்கும் விதமாக எல்லா வங்கிகளிலும் அதிகப்படியான வட்டி கொடுக்கிறார்கள். அப்படிபட்ட ஒரு திட்டத்தை பற்றி இனி காண்போம்.

   

60 முதல் 79 வயது வரை மூத்த குடிமக்கள் எனவும் 80 வயது மட்டும் அதற்கும் மேற்பட்டோர் சூப்பர் சீனியர் குடிமக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். உங்கள் வீட்டில் சூப்பர் மூத்த குடிமக்கள் இருந்தால் அவர்களுக்கு SBI இன் இந்த திட்டத்தில் முதலீடு செய்யும்போது உங்களுக்கு அதிக வட்டியுடன் நல்ல வருமானமும் கிடைக்கும். இந்த சூப்பர் சீனியர் குடிமக்களுக்காகவே SBI Patron நிலையான வைப்புத் தொகை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

   

 

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இந்த புதிய நிலையான வாய்ப்புத் தொகை திட்டத்தை சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு என பிரத்தியேகமாக கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தில் சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு ஐந்தாண்டு FD நிலையான வைப்பு திட்டத்திற்கு 7.6 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அதிகபட்சமாக மூன்று கோடி வரை முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச தொகை ரூபாய் 1000 ஆகும். உங்கள் வீட்டில் சூப்பர் மூத்த குடிமக்கள் இருந்தால் அவர்களுக்காக இந்த திட்டத்தில் நீங்கள் சேரும் போது அதிக வட்டியுடன் நல்ல வருமானம் கிடைக்கும்.