ஒரு கட்டத்தில் சினிமாவே வேண்டாம் என்ற முடிவை எடுத்த நயன்தாரா… மனதை மாற்றி செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி வைத்தவர் இவர்தான்!

By vinoth on தை 30, 2025

Spread the love

தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. ஐயா படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா அதன் பிறகு சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் நடித்ததன் மூலம் உடனே முன்னணி நடிகை அந்தஸ்தைப் பெற்றார்.

சிம்புவுடன் அவர் நடித்த வல்லவன் திரைப்படம் அவரை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தது. அவருடனான காதல் மற்றும் முத்தக் காட்சிகள் இணையத்தில் வெளியானது எல்லாம் அவரைச் சுற்றி ஒரு சர்ச்சை வளையத்தை உருவாக்கின. அது அவரின் சினிமா கேரியருக்கு மிகப்பெரிய அளவில் உதவியது.

   

அதன் பின்னர் சிம்புவை பிரிந்த அவர் பிரபுதேவாவைக் காதலித்து அவரோடு ஒன்றாக வாழ்ந்தார். அப்போது பிரபுதேவாவுக்குக் கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருந்தன. ஆனாலும் அது தெரிந்தும் நயன்தாரா அவரைக் காதலித்தார். பிரபுதேவா, நயன்தாராவைத் திருமணம் செய்த்கொள்வதற்காக தன் மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார்.

   

 

இது சம்மந்தமாக அப்போது நயன்தாரா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதன்பின்னர் பிரபுதேவாவுடனான காதலும் பிரிந்து இயக்குனர் விக்னேஷ் சிவனைத் திருமணம் செய்துகொண்டு தற்போது நடிப்பிலும் குடும்ப வாழ்க்கையிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

பிரபு தேவாவுடனான காதல் முறிவுக்கு வந்தபோது நயன்தாரா விரக்தியில் இனிமேல் சினிமாவே வேண்டாம் என்று முடிவெடுத்து மும்பையில் போய் வசித்தார். அங்கேயே செட்டில் ஆகிவிடும் எண்ணத்திலும் இருந்தார். அப்போது அவரை சந்தித்து அவரிடம் ‘ராஜா ராணி’ படத்தின் கதையை சொல்லி அவரின் மனதை மாற்றி மீண்டும் சினிமாவுக்கு அழைத்து வந்தவர் இயக்குனர் அட்லிதான்.

ராஜா ராணி திரைப்படமும் காதல் தோல்விக்குப் பின்னான வாழ்க்கையைப் பற்றிய பேசிய படம் என்பதால் நயன்தாராவுக்கு அந்த கதை மிகவும் எமோஷனலான ஒன்றாக இருந்திருக்கும். அந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்துதான் தமிழ் சினிமாவில் நயன்தாராவின் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியது என சொல்லலாம். அதன் பின்னர்தான் அடுத்தடுத்து வெற்றிகளைக் கொடுத்து லேடி சூப்பர் ஸ்டார் ஆனார்.