கிராம மக்களின் தாகத்தை தீர்த்த கடவுள்… 3 லட்சத்திற்கு மாபெரும் உதவி செய்த Kpy பாலா..!

By Soundarya on தை 7, 2025

Spread the love

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் பாலா தனது காமெடி மூலமாக மக்கள் அனைவரையும் சிரிக்க வைத்த பாலா தற்போது பல நெகிழ்ச்சியான சம்பவங்களை செய்து வருகிறார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அனைவரையும் கலகலப்பாக வைத்திருந்தார். தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் இவர் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

#image_title

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் கூட பிறருக்கு உதவி செய்ய யோசனை செய்யும் நிலையில் தான் வாங்கும் சம்பளத்தை தனக்கென வைத்துக் கொள்ளாமல் பிறருக்கு தானதர்மம் செய்து வருவதை முழு நேரமும் வேலையாக வைத்திருக்கின்றார் பாலா. மலை கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்தது என பாலா செய்த உதவிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

   
   

#image_title

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு லாரன்ஸ் மாற்றம் என்னும் சேவையை தொடங்கினார். இந்த சேவையில் KPY பாலா எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்தனர். அவர்கள் மட்டுமில்லாமல் சிறு வயது முதலே லாரன்ஸ்ஆல் வளர்க்கப்பட்டவர்களும் இப்போது மாற்றம் சேவையில் இணைந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

#image_title

அதேபோல பாலா மலைவாழ் கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் ஒரு கிராமத்திற்கு வாட்டர் பியூரிபையர் வாங்கி வைத்தார். இந்நிலையில் தற்போது ஒரு கிராமத்திற்கு நல்ல தண்ணீர் இல்லை என்பதையறிந்து பாலா அந்த கிராமத்தில் தண்ணீர் சுத்திகரிப்பான் வைத்து கொடுத்து திறந்து வைத்துள்ளார். இதனுடைய சேவு மட்டும் 3 லட்சம் இருக்குமாம். அதுமட்டுமின்றி அங்குள்ள மக்களுக்கு சாப்பாடும் அளித்துள்ளார்.