தமிழ்நாட்டில் யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத மனிதர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் MGR. தான் வாழும் காலத்தில் கர்ணனாக வாரி வழங்கும் வள்ளலாக வாழ்ந்து இருக்கிறார் MGR. நடிகராக மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக சிறப்பாக ஆட்சி நடத்தியவர் MGR.

தான் இறக்கும் வரையில் முதலமைச்சராகவே பதவியில் இருந்து மறைந்தார் MGR. இவருக்கு இருந்தவர்கள் எல்லாம் ரசிகர்கள் அல்ல பக்தர்கள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தீவிர ரசிகர்களை கொண்டிருந்தவர் MGR. இவர் நடித்த படங்கள் பெரும்பாலானவை ஹிட் தான். இவரது திரைப்படங்களில் சமூகநீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் நிறைந்திருக்கும்.
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்று விரும்பி திராவிட கட்சியில் இணைந்து பணியாற்றினார். அதற்கு பிறகு ஒத்து வராததால் அந்த கட்சியிலிருந்து பிரிந்து தனியாக தனக்கென்று ஒரு கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றவர் MGR. அவரது கட்சி சின்னமாக அறிவித்திருந்தது ரெட்டை இலை, ஆனால் அந்த காலத்தில் வேறொரு சின்னமும் வர வாய்ப்பிருந்தது. அது என்னவென்று இனி காண்போம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த மறைந்த தாமரைக்கனி MGR இன் தீவிர பக்தராக சிறுவயதிலிருந்தே இருந்திருக்கிறார். தான் படிக்கும் காலத்திலேயே MGR ரசிகர் மன்றம் வைத்து நடத்தி வந்திருக்கிறார். அவர் படம் ரிலீஸ் ஆகும்போது ரசிகர் மன்றம் சார்பாக பல நற்காரியங்களையும் செய்திருக்கிறார். அப்போது ரசிகர் மன்றத்திற்கு ஒரு சின்னம் வைக்க வேண்டும் என்று நினைத்து தன் பெயரில் இருந்த தாமரையை சின்னமாக வைத்திருக்கிறார். அப்போது MGR மட்டும் அந்த சின்னத்தை அங்கீகரித்து இருந்ததால் அதிமுகவின் சின்னம் தாமரையாக இருந்திருக்கும் இன்று பிஜேபியின் சின்னமாக அது மாறி இருக்காது.
