ராஜாஜி அந்த படத்த பாத்துட்டாரா… அப்ப அதில் என்னமோ இருக்கணும்… மார்க்கெட்டிங்கில் மாஸ் காட்டிய வாசன்- பேய் ஓட்டம் ஓடிய ஔவையார்!

By vinoth on புரட்டாதி 17, 2024

Spread the love

தமிழ் சினிமாவை இந்திய அளவில் கொண்டு சென்றதில் மறைந்த ஜெமினி ஸ்டுடியோ அதிபர் வாசனுக்கு பெரும் பங்குண்டு. அவர் எடுத்த ஔவையார், சந்திரலேகா உள்ளிட்ட படங்கள் பிரம்மாண்டத்தால் ரசிகர்களை வாய்பிளக்க வைத்தன. அதிலும் சந்திரலேகா என்ற திரைப்படம் தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்திய அளவில் பெற்ற வெற்றியை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

1940 ஆம் ஆண்டே திட்டமிடப்பட்டு, 3 ஆண்டுகள் முன் தயாரிப்புப் பணிகள் நடத்தி 1943 ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்ட சந்திரலேகா திரைப்படம் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் உருவாக்கத்தில் இருந்தது. சுதந்திரம் கிடைத்த பின்னர் படம் 1948ம் ஆண்டு வெளி வந்தது.  முதலில் இந்த படத்தை இயக்குனர் வேறொரு இயக்குனரை ஒப்பந்தம் செய்தார் வாசன். ஆனால் அவர் எடுத்த படம் தனக்கு பிடிக்காததால் தானே இயக்க முடிவு செய்தார்.

   

எஸ் எஸ் வாசன்

   

அதே போல அவர் தயாரிப்பில் உருவான ஔவையார் திரைப்படம் 6 ஆண்டுகள் உருவாக்கத்தில் இருந்தது. பல முறை எடுக்கப்பட்டு இருந்த 6 மணிநேரத்துக்கும் மேற்பட்ட காட்சிகளை சுருக்கி படமாக எடுத்து 1953 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்தார். அதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் பராசக்தி திரைப்படம் வெளியாகி பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அதனால் இனிமேல் புராண படங்கள் எல்லாம் ஓடாது என ஒரு பேச்சு எழுந்தது.

 

அதனால் அந்த படத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என அப்போதைய முதல்வர் ராஜாஜியைப் பார்க்க வைத்துள்ளார். ராஜாஜிக்கு சினிமா என்றாலே பிடிக்காது. ஆனாலும் அந்த படத்தை வந்து பார்த்துள்ளார். ராஜாஜி படம் பார்த்ததை செய்தியாக்கி விளம்பரம் கொடுத்துள்ளனர். ராஜாஜி அவ்வையார் படத்தைப் பார்த்துள்ளார் என்பதே ஒரு பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதனால் படம் வெளியானதும் பெரியளவில் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு அலைமோதியுள்ளனர். படம் தொடர்ந்து சிறப்பாக ஓட, இரண்டாவது முறை தானே டிக்கெட் எடுத்துக் கொண்டு போய் மீண்டும் ஒரு முறை படம் பார்த்துள்ளார்.

ராஜாஜி இரண்டாவது முறை ஒரு படம் பார்க்கிறாரா என்று படம் தியேட்டரில் இருந்து தூக்கப் போகும் நிலையில் மீண்டும் மக்கள் கூட்டம் படையெடுக்க ஆரம்பித்துள்ளது. இப்படி பெருவெற்றி பெற்றுள்ளது அவ்வையார் திரைப்படம். ஆனால் கதை இதோடு முடியவில்லை. ராஜாஜி இறந்த போது அவரின் நாட்குறிப்புகளைப் பார்க்கும் போது இந்த படத்தை பற்றி எழுதி வைத்திருந்தது என்ன தெரியுமா?

அது இதுதான்”இந்த படத்தில் அப்படி என்ன இ

அவ்வையார் படத்தில் கே பி சுந்தராம்பாள்.

ருக்கிறது என்று மக்கள் விழுந்தடித்து இப்படி பறக்க பறக்க இந்த படத்தைப் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை” என்றுதான் எழுதி வைத்திருந்தாராம்.