நடிகை ஜனனி அசோக் குமார் நண்பேன்டா திரைப்படம் மூலம் திரையுலத்தில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அந்த படத்தில் நயன்தாராவின் தோழியாக ஜனனி சிவகுமார் நடித்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு ரிலீசான ஏமாளி திரைப்படத்தில் ஜனனி அசோக் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவருக்கு வெள்ளித்திரையில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்திக் கொண்ட ஜனனி அசோக்குமார் திடீரென சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை சீரியலில் நடித்த ஜனனி அசோக் குமார் பிரபலமானார்.

இது மட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் சரண்யா கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இதயம் சீரியலில் 5 வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்து வருகிறார். மௌன ராகம் என்ற சீரியல் மூலம் ஜனனி அசோக் குமார் சின்னத்திரையில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி அசோக் குமார் அவ்வபோது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் கருப்பு நிற சேலையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். பின்னர் அந்த போட்டோஸை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கின்றனர்.

