நடிகை பிரணிதா நீச்சல் குளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பெங்களூருவை பூர்விகமா கொண்டவர் பிரணிதா. கடந்த 2010 ஆம் ஆண்டு கன்னட ரீமேக் ஆன பொறுக்கி என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினியாக அறிமுகமானார்.

கன்னட சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த இவர் தமிழில் 2015 ஆம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சகுனி என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவந்த மாஸ் என்கின்ற மாசிலாமணி என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் நடித்து வந்த இவர் பிறகு புஷ் என்கின்ற பாலிவுட் திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார்.

இவர் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

குழந்தை பெற்ற பிறகு உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பிய பிரணிதா சினிமாவில் நடிப்பதற்கு கவனம் செலுத்தி வருகின்றார்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் இருந்தபடி அவர் வெளியீட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

