CINEMA
அட அப்படியா..! வெற்றி நடைப்போட்டுக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா..?
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் மகாராஜா திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரை ஹீரோ என்று ஒரு சிறிய வட்டத்திற்குள் கொண்டு வந்து விட முடியாது. ஹீரோவை தாண்டி வில்லன், சிறப்பு தோற்றம், வயசான கதாபாத்திரம் என அனைத்திலும் நடித்து தன்னுடைய நடிப்பை மெருகேற்றி வைத்திருக்கின்றார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை தன்னால் நடிக்க முடியும் என்று சொல்லாமல் சொல்லிக் காட்டியவர் விஜய் சேதுபதி.
புது முயற்சிகளை மேற்கொள்வது என்பதை இவருக்கு மிகவும் பிடிக்கும். தொடர்ந்து சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களில் சமீபத்தில் நடித்து வந்த விஜய் சேதுபதி ஜவான் திரைப்படத்திற்கு பிறகு இனிமே வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். இவருக்கு ஹீரோவாக சிறந்த கம்பேக் கொடுத்த திரைப்படமாக அமைந்தது தான் மகாராஜா. இதில் மற்றொரு சிறப்பு உண்டு,
இது விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமும் ஆகும். குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கியிருந்த நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றார், ஒரு ஹீரோவுக்கு ஐம்பதாவது திரைப்படம் என்பது மிக ஸ்பெஷலான படம் அந்த ஸ்பெஷலான திரைப்படத்தின் எந்த ஒரு ஹீரோயின்ஸமும் காட்டாமல் கதை மட்டுமே முழுக்க முழுக்க நிரம்பி இருக்க விஜய் சேதுபதி மகாராஜாவாகவே கலக்கியிருந்த திரைப்படம் தான் மகாராஜா.
இப்படம் வெளியான நாள் முதலே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சக்க போடு போட்டு வருகின்றது. இப்படத்தை பார்க்கும் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. எங்கு பார்த்தாலும் பாசிட்டிவான விமர்சனங்கள் இருந்து வருவதால் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்நிலையில் முதன் முதலில் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்தது விஜய் சேதுபதி இல்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.
அதாவது பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தான் இப்படத்தில் முதலில் நடிப்பதற்கு ஹீரோவாக கமிட் ஆனார். தனஞ்செயனின் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிப்பில் மகாராஜா திரைப்படம் உருவாக இருந்தது .விஜய் ஆண்டனிக்கு கதை கூறி அவர் இப்படத்தில் நான் தான் நடிப்பேன் என்று அடம் பிடித்து இருந்தார்.
ஆனால் நித்திரன் சாமிநாதனுக்கு பேஷன் ஸ்டுடியோவில் இருந்து என்ஒசி கிடைக்கவில்லை. இப்படத்தை விஜய் ஆண்டனியை வைத்து நாங்களே தயாரிக்கின்றோம் என்று கூறி இருக்கிறார். ஆனால் தனஜெயன் விஜய் ஆண்டனியை நான்தான் ஒப்பந்தம் செய்துள்ளேன் என்று கூறிய காரணத்தினால் கடைசி நேரத்தில் இப்படம் விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ளது. இந்த தகவலை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார்.