பிரபல நடிகரான சத்யராஜ் ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்திலும் நடித்து மக்களை தன்வசம் ஈர்த்தவர். சத்யராஜின் தனித்துவமான நடிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் சத்யராஜ் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தினார்.

வேதம் புதிது, வால்டர் வெற்றிவேல், நண்பன், குங்குமப்பொட்டு, கவுண்டர் சின்னத்தம்பி பெரியதம்பி, அமைதிப்படை, கடலோரக் கவிதைகள், ரிக்சா மாமா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் சத்யராஜ் நடித்துள்ளார். இவரது மகன் சிபிராஜும் ஹீரோவாக சில படங்களில் நடித்துள்ளார். பாகுபலி திரைப்படத்தில் சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரத்தை யாராலும் மறக்கவே முடியாது.

அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகைகளான அம்பிகா அமலா உள்ளிட்டவருடன் இணைந்து சத்யராஜ் நடித்துள்ளார். இந்நிலையில் சத்யராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது நான் ரஜினி சாரோட நினைந்து நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். மிஸ்டர் பாரத் படத்தில் நான் ரஜினி சாருக்கு அப்பாவாக நடித்தேன். அம்பிகா எனக்கு மருமகளாக நடித்தார்.

அதிலிருந்து பத்து நாட்களுக்கு பிறகு மக்கள் என் பக்கம் படத்தில் நானும் அம்பிகாவும் ஜோடியாக நடித்தோம். இதே போல வேதம் புதிது படத்தில் அமலா எனக்கு மருமகளாக நடித்தார் பின்னர் ஜீவா படத்தில் நானும் அமலாவும் டூயட் சாங்கிற்க்கு டான்ஸ் ஆடினோம். என்னை ரசிகர்கள் மன்னித்து விட்ட மாதிரி யாரையும் மன்னிச்சு விட்டுருக்க மாட்டாங்க என பேசியுள்ளார்.
View this post on Instagram
