வெளிநாட்டிற்கு சென்ற வைரமுத்து.. உள்நாட்டு அமைச்சர்களுக்கு விடுத்த வேண்டுகோள்.. ஓ இதுதான் விஷயமா..?

By Mahalakshmi on ஆனி 15, 2024

Spread the love

பிரபல பாடலாசிரியரான வைரமுத்து துபாய் சென்றுள்ள நிலையில் ஒரு சிறப்பான திட்டத்தை உள்நாட்டு அமைச்சர்களுக்கு அட்வைஸாக கொடுத்திருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக வலம் வருபவர் வைரமுத்து. இவர் தமிழ் சினிமாவில் கடந்த 44 ஆண்டுகளாக சிறந்த பாடலாசிரியராக வலம் வருகிறார். 44 ஆண்டுகளுக்கு முன்பு நிழல் என்கின்ற திரைப்படத்தில் இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலை எழுதி தனது திரைபயணத்தை தொடங்கிய வைரமுத்து பல விருதுகளை சொந்தமாக்கி இருக்கின்றார்.

   

   

1985 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த முதல் மரியாதை திரைப்படத்தில் அவர் எழுதிய பாடலுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இதுவரை ஏழு தேசிய விருதுகள், தமிழ்நாடு அரசு வழங்கும் ஆறு மாநில விருதுகள், 25க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கவி தொகுப்பு என எழுதி மிகப்பெரிய பாராட்டுக்குரிய மனிதராக வலம் வருகின்றார்.

 

முன்னணி நடிகர்களாக விளங்கும் சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு இவர் பாடல் எழுதி இருக்கின்றார். தற்போது திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருக்கும் வைரமுத்து அவ்வபோது சமூக வலைதள பக்கங்களில் சில விஷயங்களை பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் பதிவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது:” துபாயில் இருக்கிறேன் எனக்குப் பின்னால் மலைபோல் தெரிவது மலையல்ல பதப்படுத்தப்பட்ட துபாயின் கழிவுகளை ஊருக்கு வெளியே கொட்டி மண்ணிட்டு மூடிய குப்பைமேடு இதில் துர்நாற்றம் இல்லை; சுகாதாரக் கேடு இல்லை; சுற்றுச்சூழல் மாசு இல்லை; நாளை மக்கிய பிறகு தாவர எருவாகும் சாத்தியங்கள் உண்டு வெளிநாடு செல்லும் அமைச்சர்களும் அதிகாரிகளும் இதுபோன்ற உருப்படியான திட்டங்கள் கண்டு உள்நாட்டில் செயல்படுத்துங்களப்பா என்று தெரிவித்திருக்கிறார்.