சூரியின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் கருடன் திரைப்படத்தின் மூன்றாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வளம் வந்தவர் நடிகர் சூரி. தற்போது ஹீரோவாக நடித்து அசத்தி வருகின்றார். காமெடி கதாபாத்திரத்தில் நடித்த பல பிரபலங்கள் பின் நாட்களில் ஹீரோவாக மாறிவிடுகிறார்கள்.

எடுத்துக்காட்டாக சந்தானம், யோகி பாபு ஆகியோரை கூறலாம். அவர்களின் வரிசையில் இணைந்திருக்கின்றார் சூரி. விடுதலை என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு பெற்றார். அதனைத் தொடர்ந்து விடுதலை 2 திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார். தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் சக்க போடு போட்டு வருகின்றது. சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் கூட்டம் சராசரியை விட அதிகமாகவே இருந்தது.
படத்தின் வசூலும் ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. அந்த வருடம் கருடன் படத்தின் முதல் நாள் வசூல் நான்கு கோடியை எட்டிருந்த நிலையில் இரண்டாவது நாளில் 4.5 கோடியும், மூன்றாவது நாளான நேற்று 6.25 கோடிகளையும் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் மூன்று நாளில் இப்படம் 15 கோடியை வசூல் செய்துள்ளது. இதனால் படம் குழுவினர் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

விடுதலை படத்தில் குமரேசனாக கலக்கிய சூரி கருடன் திரைப்படத்தில் சொக்கனாக நடித்த மிரட்டி இருக்கின்றார். இப்படத்தின் மிகப்பெரிய பலம் யுவன் இசையில் வெளியான பாடல் தான். மேலும் இப்படத்தில் சமுத்திரக்கனி. ஷிவதா, ஆர்வி உதயகுமார் என பல பிரபலங்கள் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள். தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்றுள்ள கருடன் இந்த வாரம் வசூல் பேட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் சூரி காமெடி என்கின்ற அடையாளத்திலிருந்து அடுத்ததாக ஹீரோ என்ற அடையாளத்தை பெறப்போகிறார்.
