காதல் கோட்டை படத்தின் போது பாடாய் படுத்திய தங்கர் பச்சன்.. நடந்ததை விவரித்த தேவயானி..

By indhuramesh on வைகாசி 6, 2024

Spread the love
1996 ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காதல் கோட்டை. அஜித், தேவயானி நடித்த இந்த படத்தில் கரண் தலைவாசல் விஜய், மணிவண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

பார்த்துக் கொள்ளாமலே காதல் என வித்தியாசமான கோணத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் தங்கர் பச்சன். பொதுவாக அதிகப்படியான தங்கர் பச்சன் படங்களில் கதாபாத்திரங்கள் கூடுதல் ஒப்பனை இல்லாமல் எளிமையாக இருப்பார்கள்.

அதேபோன்றுதான் இந்த படத்திலும் தேவயானி கதாபாத்திரம் அமைந்திருக்கும். இந்த படத்தின் கதை தொடக்கத்தில் பல தயாரிப்பாளர்களால் புறக்கணிக்கப்பட்டாலும் இறுதியில் விருது பெற்ற படமாக வெற்றி படமாக திகழ்ந்தது.

   

   

சமீபத்தில் இந்த படத்தில் நடித்த தேவயானியின் நேர்காணல் வெளியாகி இருந்தது. அதில் காதல் கோட்டை படம் பற்றி அவர் கூறிய போது தங்கர்பச்சான் பற்றி பகிர்ந்திருந்தார். அதாவது படப்பிடிப்பு தளத்திற்கு மேக்கப் போட்டுவிட்டு வந்தால் தங்கர் பச்சன் திட்டுவாராம்.

 

காதல் கோட்டை படத்தில் தேவயானி கையில் எப்போதும் ஏதாவது ஒரு மணி பர்ஸ், ஹேண்ட் பேக், சூட்கேஸ் போன்றவை இருந்திருக்கும். ஆனால் அதையும் அவர் காலியாக கொடுக்க மாட்டாராம். படப்பிடிப்பு தளத்தில் இருப்பவர்கள் சூட்கேஸில் ஒன்றும் வைக்காமல் எளிதாக தூக்கும்படி கொடுத்தால் தங்கர் பச்சன் திட்டி விடுவாராம்.

இருக்கும் பொருள் எல்லாவற்றையும் அதனுள் வைத்து கணமாக இருந்தால் தான் நடக்கும் போது உடல் அசைவுகள் சரியாக இருக்கும் என்பது தங்கர் பச்சனின் எண்ணம். அதேப்படி தான் அனைத்தும் நடக்குமாம். இதை தான் தேவயானி பகிர்ந்திருந்தார்.