நடிகர் எம்ஜிஆர், தமிழ் சினிமாவில் மக்கள் திலகமாக வலம் வந்தவர். ஒரு கட்டத்தில் அதிமுகவில் முழுநேர அரசியலில் ஈடுபட்டார். ஆனாலும் சினிமாவை விட்டு விலகும் முடிவுக்கு அவர் வரவில்லை. சினிமாவில் நடிக்க ஆசை இருந்தும், நேரமின்மையால் அரசியல் பணிகளால் அவரால் நடிக்க முடியவில்லை. எனினும் ஒரு கட்டத்தில் இனிமேல் சினிமாவில் நடிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு எம்ஜிஆர் வந்திருக்கிறார். இதுகுறித்து பகிரங்கமாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அதுகுறித்து நேர்காணல் ஒன்றில் சினிமா விமர்சகர் டாக்டர் காந்தராஜ் கூறியதாவது, எம்ஜிஆர் சினிமாவில் இருந்துவிட்டு, அரசியலில் ஆர்வமாக இருந்த காலகட்டம் அது. அப்போது பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படம் செம ஹிட் ஆனது. அந்த படத்தை எம்ஜிஆர் பார்த்திருக்கிறார். அடுத்து வந்த கிழக்கே போகும் ரயில் படமும் ஒரு வருடம் தியேட்டரில் ஓடி அதுவும் செம ஹிட் ஆனது. இதைத்தொடர்ந்து வந்த அலைகள் ஓய்வதில்லை படமும் பாரதிராஜாவின் செம ஹிட் படங்களில் ஒன்றாகவே இருந்தது. 16 வயதினிலே, கிழக்கு போகும் ரயில் படங்களை பார்த்த பிறகு, நமது ஸ்டைல் படங்கள் இனி ஓடாது. தமிழ் சினிமா வேறு ஒரு மாதிரியான ஒரு கட்டத்துக்கு போய்விட்டது என்பதையும் எம்ஜிஆர் உணர்ந்திருக்கிறார்.

இந்த சூழலில், அலைகள் ஓய்வதில்லை படத்தின் வெற்றி விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய எம்ஜிஆர், மேடையில் இருந்த இயக்குநர் பாரதிராஜாவை பார்த்து, நான் சினிமாவை விட்டு வெளியே போக காரணமே நீங்கதான்.உன்னோட கிழக்கே போகும் ரயில் படத்தை பார்த்த பிறகுதான் இனி நமக்கு சினிமா வேண்டாம்,சரிபட்டு வராது என்றே முடிவுக்கே வந்தேன். அதனால் சினிமாவில் இருந்து நான் வெளியே போக காரணமே நீங்கதான் என்று கூறியிருக்கிறார் எம்ஜிஆர் என்று அந்த நேர்காணலில் டாக்டர் காந்தராஜ் கூறியிருக்கிறார். அதாவது தமிழ் சினிமாவில் மாற்று சினிமா காலத்தை உருவாக்கியவரே இயக்குநர் பாரதிராஜா தான் என்பதை எம்ஜிஆரே ஒத்துக்கொண்டு, அதை பகிரங்கமாக மேடையில் தெரிவித்து, பாரதிராஜாவை மறைமுகமாக பாராட்டி இருக்கிறார்.

#image_title
