BREAKING: அடுத்தடுத்து 844 ரவுடிகள் கைது… முதல்வர் விஜய்யின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்..!!

By Soundarya on வைகாசி 23, 2026

Spread the love

தமிழ்நாட்டில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் ₹1.43 கோடி மதிப்புள்ள 267 கிலோ கஞ்சா மற்றும் 2,476 போதை மாத்திரைகள் காவல் துறையினரால் அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக மாநிலம் முழுவதும் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக காவல் துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இதே காலகட்டத்தில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக 844 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தலைமை இயக்குநர் (DGP) தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்களின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரவுடிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு எதிராக காவல் துறை தொடர்ந்து மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.