திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கோவிந்தாபுரம் ஊராட்சியை சேர்ந்த பாபு என்ற கட்டிட தொழிலாளியின் இரண்டாவது மகள் தனஸ்ரீ. எட்டு வயதாகும் இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் இன்று காலை தன ஸ்ரீ வழக்கம்போல வீட்டிலிருந்து பள்ளிக்கு கிளம்பியுள்ளார். ஆனால் காலை 10 மணி அளவில் பள்ளி நிர்வாகத்தினர் தனஶ்ரீயின் பெற்றோரை தொடர்பு கொண்டு அவர்களின் மகள் பள்ளிக்கு வரவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாபு அக்கம் பக்கத்தில் தன்னுடைய மகளை தேடி அலைந்த நிலையில் எந்த தகவலும் கிடைக்காததால் உடனே போலீசில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் சிறுமி மாயமானது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கிய நிலையில் இன்று காலை கோவிந்தாபுரம் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் குடுகுடுப்பைக்காரர்கள் மூன்று பேர் சுற்றி திரிந்துள்ளனர். இதனால் மாந்திரீகம் செய்வதற்காக சிறுமி கடத்தப்பட்டாரா என்று பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. இதனிடையே குடுகுடுப்பைக்காரர்கள் இரண்டு பேரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வரும் இடையே இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…
மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…
திமுக மாநிலத் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தொண்டர்கள் தன் மீது செருப்பு வீசியதாகக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்…
மரணப் படுக்கையில் இருந்த மனைவி, தனது கணவரிடம் கேட்ட அந்த கடைசி ஆசை கணவனின் இதயத்தையே நொறுக்கிவிட்டது. "ஒரே ஒரு…