உத்திரபிரதேசம் மாநிலம் ராம்கூர் மாவட்டத்தில் வசித்து வரும் சஞ்சு என்பவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இந்த தம்பதிக்கு எட்டு மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே தனது மனைவியிடம் வரதட்சணையாக பணம் மற்றும் கார் வேண்டும் என்று கேட்டு சஞ்சு தொடர்ந்து தொல்லை செய்து வந்துள்ளார். சஞ்சு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைப்படுத்தி உள்ளனர். இப்படியான நிலையில் வரதட்சணை கேட்டு தன்னுடைய மனைவியை மிரட்டுவதற்காக பிறந்து எட்டு மாதங்களை ஆன தன்னுடைய குழந்தையை தலைகீழாக பிடித்து தூக்கியபடி சஞ்சு வீதியில் நடந்து சென்றார்.
இதனைப் பார்த்த ஊர் மக்கள் இது தொடர்பாக கேட்டபோது தனக்கு பணம் வேண்டும் எனவும் இதை வீடியோ எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் பகிரங்கமாக கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் சஞ்சு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேசமயம் சஞ்சுவின் குழந்தை தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குழந்தையின் இடுப்பு மற்றும் எலும்பு இடம்பெயர்ந்து உள்ளதாகவும் அவருடைய மனைவி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…