“தாய் அன்புக்கு ஈடேது”… உயிருக்கு போராடிய தன் மகனுக்காக தாய் செய்த நெகிழ வைக்கும் செயல்… இந்த மனசு யாருக்கு வரும்…?

By Nanthini on ஐப்பசி 18, 2025

Spread the love

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்த கங்கா என்ற 72 வயது மூதாட்டி தன் மகனுக்காக கிட்னியை தானம் செய்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது. கங்கா என்ற மூதாட்டிக்கு கமலேஷ் (46) என்ற மகன் உள்ளார். இவர் கிட்னி பிரச்சனையால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

இந்நிலையில் மகனுக்காக தனது கிட்னியை தானமாக வழங்க கங்கா முன் வந்தார். அவரின் இரண்டு கிட்னிகளும் நல்ல நிலையில் உள்ளது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலமாக கங்காவின் ஒரு கிட்னி மகனுக்கு பொருத்தப்பட்டது. தற்போது இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. பெற்ற பிள்ளைக்காக தாய் எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டார் என்பதற்கு இந்த ஒரு சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.