7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை… அழுகிய நிலையில் பிளாஸ்டிக் ட்ரம்மிற்குள்… சிசிடிவியில் சிக்கிய அந்த 5 நிமிட பதைபதைக்க வைக்கும் காட்சி…!

By Nanthini on மாசி 21, 2026

Spread the love

ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்த கொடூர சம்பவமும், அதன் அதிரடி முடிவும் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிரவைத்துள்ளது. மதனப்பள்ளி அருகே உள்ள நீருகட்டுவரிபள்ளியைச் சேர்ந்த 27 வயது வாலிபர் குலவர்தன், வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்த நிலையில், கடந்த ஜனவரி 16-ம் தேதி தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமியை நயவஞ்சகமாக அழைத்துச் சென்றுள்ளார். யாரும் இல்லாத நேரத்தில் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், சடலத்தை தண்ணீர் பிளாஸ்டிக் ட்ரம்மிற்குள் மறைத்து வைத்துவிட்டு தப்பியோடியது மனிதநேயமற்றச் செயலாகப் பார்க்கப்படுகிறது.

சிறுமி காணாமல் போனது குறித்துப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, குலவர்தன் அந்தச் சிறுமியை அழைத்துச் சென்றது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் குலவர்தனின் வீட்டில் சோதனை நடத்தியபோது, அழுகிய நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. இந்த விவகாரம் காட்டுத்தீயாகப் பரவிய நிலையில், தலைமறைவாக இருந்த குலவர்தனை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி பிடித்துக் கைது செய்தனர். எனினும், காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த குலவர்தன் அங்கிருந்து தப்பியோடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

   

குலவர்தனை மீண்டும் பிடிக்க போலீசார் வலைவீசித் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் அங்குள்ள ஆற்றில் வாலிபர் ஒருவரின் சடலம் மிதப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு ஆய்வு செய்தபோது, அது தப்பியோடிய குற்றவாளி குலவர்தன் என்பது உறுதியானது. தான் செய்த கொடூர குற்றத்திற்காகக் கிடைக்கப்போகும் கடுமையான தண்டனைக்கு அஞ்சி, அவர் ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

   

சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இயற்கை உடனடியாக நீதி வழங்கிவிட்டதாகக் கருதிய அப்பகுதி மக்கள், குலவர்தனின் மரணத்தைக் கொண்டாடி வருகின்றனர். குற்றவாளி உயிரிழந்த தகவலறிந்த பொதுமக்கள் மற்றும் சிறுமியின் உறவினர்கள் வீதிகளில் பட்டாசு வெடித்துத் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இது ஒரு பாடமாக அமையும் என்றும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.