தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தில் ஏழு மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது பிறந்தநாளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பிரதியுஷா என்ற பெண், நர்சம்பேட்டை நகரில் உள்ள தனது வீட்டின் முற்றத்தில் உள்ள உலர்த்தும் கம்பியில் இருந்து துணிகளை எடுத்துக்கொண்டிருந்தபோது, மின் கம்பியில் சிக்கியதாக கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உதவிக்கு விரைந்தனர், ஆனால் எந்த உதவியும் அவருக்கு எட்டுவதற்கு முன்பே அவர் உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கியது எப்படி? என போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பிரதியுஷா தனது முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால், இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
