ஐயோ… என் மகளைக் காணவில்லை… கதறிய தாய்… 6 வயது சிறுமி கழுத்தை நெரித்து படுகொலை… சாக்குமூட்டையில் தூக்கிச் செல்லப்பட்ட அதிர்ச்சி… பதறவைக்கும் CCTV காட்சி… உ . பி – யில் பரபரப்பு…!

By Swetha on ஆவணி 30, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் எக்கோடெக்-3 காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஹல்டோனி பகுதியில் ஆறு வயது சிறுமி ஒருவரைக் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் உடல் சாக்குமூட்டையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும், முதற்கட்ட விசாரணையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்திற்கு சற்று முன்பு ஒரு இளைஞர் சிறுமியை ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்லும் காட்சியும், மற்றொரு காட்சியில் ஒரு நபர் சிறுமியின் உடலைச் சாக்குமூட்டையில் சுமந்து செல்வதும் அப்பகுதியில் பதிவான சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. இதன் அடிப்படையில் நடத்திய விசாரணையில், இக்கொலை வழக்கில் ஒரு அயலவருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

https://twitter.com/HateDetectors/status/2093659054883389772/video/1

   

சிசிடிவி பதிவுகள் மற்றும் இதர சான்றுகளின் அடிப்படையில் ஒரு சந்தேக நபரைக் காவல்துறையினர் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.