“வீட்டுக்குள்ள கூப்பிட்டாரு..”! 4 மற்றும் 8 வயது குழந்தைகளிடம் அத்துமீறல்…போக்சோவில் சிக்கிய 54 வயது தாத்தா… பதறவைக்கும் வேலூர் சம்பவம்…!!

Spread the love

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில், எட்டு மற்றும் நான்கு வயதுடைய இரண்டு சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்ற குற்றத்திற்காக 54 வயது நபர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணா ஜி. ராவ் என்பவரின் மகனான பாபு என்ற அந்த முதியவர், தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைத் தவறான நோக்கத்தோடு அணுகியுள்ளார்.

விளையாடிக் கொண்டிருந்த அந்த இரண்டு சிறுமிகளையும் தனது வீட்டிற்குள் வரவழைத்த பாபு, அவர்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றுள்ளார். சுதாரித்துக்கொண்ட குழந்தைகள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி, நடந்தவற்றைத் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இது குறித்து பெற்றோர்கள் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், பாபு மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்புப் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். தங்களுக்கு நடக்கும் எவ்விதமான தவறான நிகழ்வுகளையும் குழந்தைகள் தயங்காமல் பெற்றோரிடம் பகிரக்கூடிய ஒரு பாதுகாப்பான சூழலை வீடுகளில் உருவாக்க வேண்டியது அவசியமாகும். மேலும், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இதுபோன்ற குற்றச் செயல்கள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க ‘1098’ என்ற குழந்தைகள் உதவி மைய எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

Gayathri

Recent Posts

கடவுளே… இப்படி ஒரு கொடூரமா?… ஆஸ்திரேலியாவில் போர்ஷே கார் மோதி விபத்து… நொடிப் பொழுதில் பறிபோன இரு பெண்களின் உயிர்கள்… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள பாயின்ட் குக் பகுதியில் நடந்த கோரமான சாலை விபத்தில் இந்தியாவில் உள்ள விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த…

4 minutes ago

“Wi-Fi கனெக்ஷன் கொடுக்க வந்த இடத்தில் இப்படியா…? பெண்களையும் விட்டு வைக்கல…. தடியால் அடித்து கொண்டதில் 8 பேர் படுகாயம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்தநகர் பகுதியில், பக்கத்து வீடுகளுக்கு இடையே வைஃபை இன்டர்நெட் இணைப்பு அமைப்பது மற்றும் கீழே விழுந்து…

9 minutes ago

அம்மா… இரண்டே இரண்டு நிமிடம் பேசுங்களேன்… திரும்பிப் பார்க்காத பெற்றோர்… மகன் எடுத்த விபரீத முடிவு… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

கல்லூரியிலிருந்து மனவுடைச்சலோடு வீடு திரும்பிய ஆரியன், தன் பாரத்தைப் பகிர்ந்துகொள்ள குடும்பத்தினரின் அன்பைத் தேடினான். சமையலறையில் இருந்த அம்மாவிடம், "இரண்டு…

22 minutes ago

பட்டப்பகலில் ரத்த வெள்ளத்தில் பிரபல ரவுடி… 8 பேர் கொண்ட கும்பல் செய்த அதிர்ச்சி காரியம்…. புதுச்சேரியை உலுக்கிய பயங்கரம்….!

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் பட்டப்பகலில் பிரபல ரவுடி ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை…

30 minutes ago

ஐயோ… மகளைக் காப்பாற்றப் போய் நேர்ந்த கொடூரம்… தந்தையை வெட்டிக் கொன்ற கொடூரன்… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!

மதன்னாப்பேட்டை பகுதியில் தனது மகளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் கூறிய தந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் ஐதராபாத்தின்…

34 minutes ago