சீனாவை பூர்விகமாகக் கொண்ட கிரிப்டோ கரன்சி தொழிலதிபர் ஒருவர் கடந்த வாரம் சுமார் 52 கோடிக்கு ஒரு வாழைப்பழத்தை வாங்கி உலக அளவில் ஒரே நாளில் பிரபலம் அடைந்துள்ளார். அந்த வாழைப்பழத்தை அவர் சாப்பிடுவதாக கொடுத்த வாக்கையும் தற்போது நிறைவேற்றியுள்ளார். நியூயார்க்கில் உள்ள சதபி ஏலம் மையத்தில் நடந்த ஏலத்தில் மவுரிசியோ கேட்டலான் என்ற கலைஞரின் காமெடியன் என்று பெயரிடப்பட்ட கலை படைப்பு வைக்கப்பட்டது. அது சுவற்றில் டேப் மூலமாக ஒட்டப்பட்ட ஒரு வாழைப்பழம் ஆகும். அதனை வாங்க சுமார் ஏழு பேர் ஏலத்தில் பங்கேற்றனர்.
அதில் ஜஸ்டின் சன் ஆறு பேரையும் மிஞ்சி அந்த ஒற்றை வாழைப்பழத்தை ஏலத்தில் எடுத்தார். இதனைத் தொடர்ந்து ஹாங்காங்கில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அந்த வாழைப்பழத்தை அவர் சாப்பிட்டார். ஒவ்வொரு முறையும் இந்த கலை படைப்பு காட்சிப்படுத்துவதற்கு முன்பாக வாழைப்பழம் மாற்றி வைக்கப்படும். இனி இந்த கலை படைப்பை காட்சிப்படுத்தும் உரிமையுடன் பலத்தை எவ்வாறு மாற்றுவது என்பது குறித்த வழிகாட்டுதலையும் சன் பெற்றிருக்கிறார். இந்த கலைப்படைப்பில் வைக்கப்படும் வாழைப்பழம் இதற்கு முன்பு இரண்டு முறை சாப்பிடப்பட்டுள்ளது.
இதை சாப்பிடுவதும் இந்த கலைப்படைப்பின் வரலாற்றில் இடம்பெறும் எனவும் மற்ற வாழைப்பழங்களை விட இது எனக்கு சுவையாக இருந்தது எனவும் ஜஸ்டின் தெரிவித்துள்ளார். மேலும் 34 வயதான அவர் இந்த தலைப்படைப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாக கூறியுள்ளார். இருந்தாலும் இந்த வாழைப்பழம் ஒரு வேளை அழுகி இருக்குமோ என்ற கேள்வி தனக்குள் இருந்ததை அவர் வெளிப்படையாக அவர் ஒப்பு கொண்டுள்ளார். இந்த வாழைப்பழம் உலகின் மிக விலை உயர்ந்த பழமாக ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் நினைவு பரிசாக ஒரு வாழைப்பழமும் ஒரு டேப்ரோலும் வழங்கப்பட்டது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…