“எங்க வயித்துல அடிக்காதீங்க…” உயிரை பணயம் வைத்து அசுத்த நீரில் இறங்கிய 500 பேர்…! உச்சக்கட்ட பரபரப்பு…!!

By Devi Ramu on தை 5, 2026

Spread the love

சென்னையில் தூய்மைப் பணிகளைத் தனியார் மயமாக்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சென்னை மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் தீவிரமான போராட்டத்தில் இறங்கியுள்ளனர். குறிப்பாக, எழும்பூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அசுத்தமான கூவம் ஆற்றில் இறங்கி நூதன முறையில் போராடினர். தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள ஊதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர்கள் தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மாநகராட்சியின் கீழ் உள்ள துப்புரவுப் பணிகளைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நீண்ட நாட்களாகத் தற்காலிகப் பணியாளர்களாகவே தொடரும் தங்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இந்தத் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அரசு தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கும் வரை போராட்டத்தைத் தொடரப்போவதாகத் தொழிலாளர் அமைப்புகள் அறிவித்துள்ளன.