ஈரோடு அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த மாணிக் மற்றும் மகாலட்சுமி தம்பதியினருக்கு ஐந்து வயதில் சாய்சரண் என்ற மகன் உள்ளார். இதனிடையே நேற்று இரவு சிறுவன் வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது திடீரென சிறுவன் மூச்சு விட சிரமப்பட்டு திணறியதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவனின் மூச்சு குழாயில் வாழைப்பழம் அடைத்திருப்பதாக கூறினார்.
மேலும் சிறுவனின் நிலை மோசமாக உள்ளதாகவும் உடனே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்திய நிலையில் சிறுவனை பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலே சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதனைக் கேட்டு பெற்றோர் கதறி எழுதினர். அதன் பிறகு சிறுவன் மூச்சுக்குழாயில் அடைத்திருந்த வாழைப்பழத்தை மருத்துவர்கள் அகற்றினர். இது குறித்து போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
