காலையிலேயே இபிஎஸ்-க்கு ஷாக்… சசிகலா ஆதரவாளர்களுக்கு 5 சீட்… இரட்டை இலை சின்னத்தில் போட்டி… அடுத்த பரபரப்பு…!

By Nanthini on மார்கழி 25, 2025

Spread the love

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் சசிகலா ஆதரவாளர்களுக்கு 5 சீட் ஒதுக்க இருப்பதாக ஆதரவாளர்களிடம் சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுகவை ஆதரித்து தென் மாவட்டங்களில் மட்டும் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தனது ஆதரவாளர்களிடம் அவர் கூறினார். 2026 சட்டமன்ற தேர்தலில் ஒதுங்கி இருக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தன்னுடைய இல்லத்தில் முக்கிய சில ஆதரவாளர்களை அழைத்து சசிகலா ஆலோசனை நடத்தினார். அவர்களிடம் போட்டியிடும் தொகுதிகளை கூறி அந்த தொகுதிகளில் நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவீர்கள் என்றும் அந்த தொகுதிகளில் வேலைகளை ஆரம்பிக்கவும் கூறியுள்ளார்.

வருகின்ற 2026 தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக தென் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்வேன். எனது சார்பில் ஐந்து பேருக்கு எம்எல்ஏ சீட் வாங்கி வருகின்றேன். அதில் போட்டியிட வேண்டுமென்று சசிகலா தெரிவித்துள்ளார். இதனால் அந்த நபர்கள் குழப்பத்தில் உள்ளனர். எப்படி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்கப் போகிறார் இதற்கு அதிமுகவினர் ஆதரவு தெரிவிப்பார்களா என்று அவர்கள் குழப்பத்தில் உள்ளனர். முதல் முறையாக தனித்தனியாக அழைத்து தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்து உறுதிப்பட கூறியுள்ளதாக சசிகலா ஆதரவாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் இந்த செய்தி இபிஎஸுக்கு ஷாக் கொடுத்துள்ளது.