“பல் வலியால் துடிக்கிறீங்களா?… பாட்டி வைத்தியத்தில் ஒளிந்திருக்கும் 5 மேஜிக் ரகசியங்கள்… அப்புறம் 2 நிமிடத்தில் வலி காணாமல் போகும்”…!!!

By Muthu Mani on வைகாசி 16, 2026

Spread the love

பல் வலிகளில் மிகவும் கொடுமையானது 18 வயது முதல் 30 வயதுக்குள் முளைக்கத் தொடங்கும் ‘ஞானப்பல்’ (Wisdom Teeth) எனப்படும் கடைவாய்ப் பல் வலியாகும். மற்ற பற்களைப் போலன்றி, இப்பற்கள் முழுமையாக மேலே வருவதற்குப் பல நாட்கள் ஆகும் என்பதால், அதுவரை அவ்வப்போது கடுமையான வலியும் ஈறுகளில் வீக்கமும் இருந்துகொண்டே இருக்கும். இந்தச் சமயத்தில் அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்வதைத் தவிர்த்து, நம் வீட்டிலேயே இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டு இந்த வலியைக் கட்டுப்படுத்த முடியும்.

நமது முன்னோர்கள் காலம் காலமாகப் பயன்படுத்தி வரும் கிராம்பு எண்ணெய் மற்றும் மஞ்சள் பொடி இதற்கு மிகச்சிறந்த நிவாரணியாகும். ஒரு சிறிய பஞ்சில் சில துளிகள் கிராம்பு எண்ணெயைத் தடவி வலி உள்ள இடத்தில் வைக்கலாம்; காரத்தன்மை அதிகமாக இருந்தால் அதனுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல், அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமிநாசினி பண்புகள் நிறைந்த மஞ்சள் பொடியுடன் சிறிது உப்பு கலந்து, ஞானப்பல் முளைக்கும் ஈறுகளின் மேல் தடவி வருவதன் மூலம் ஈறுகள் பலமடைந்து வலி சீக்கிரம் குறையும்.

   

ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தையும் வலியையும் குறைக்க பூண்டு மற்றும் வெங்காயச் சாறு பெரிதும் உதவுகின்றன. பூண்டுப் பற்களைச் சிறிது கல் உப்பு மற்றும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துப் பேஸ்ட் போல அரைத்து, வலி உள்ள ஈறுகளில் 20 நிமிடங்கள் தடவி வைத்திருந்து பின்னர் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். மேலும், ஒரு ஸ்பூன் வெங்காயச் சாற்றுடன் 5 சொட்டுகள் டீ ட்ரீ ஆயில் (Tea Tree Oil) கலந்து பற்கள் மற்றும் ஈறுகளில் தடவி வருவதன் மூலமும் பற்களின் இடுக்கில் ஏற்படும் தொற்றுகள் நீங்கி, வீக்கம் வேகமாக வடியும்.

   

பல் வலி உள்ள சமயங்களில் வெளியிலிருந்து கொடுக்கப்படும் ஒத்தடங்கள் (மசாஜ்) நல்ல பலனைத் தரும். ஒரு சுத்தமான துணியில் கல் உப்பைச் சூடு செய்து மூட்டை போலக் கட்டி, வலி உள்ள பகுதிக்கு வெளியே கன்னத்தில் ஒத்தடம் கொடுக்கலாம் அல்லது துணியை வெந்நீரில் நனைத்தும் ஒத்தடம் தரலாம். இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் தற்காலிகமாக வலியைக் கட்டுப்படுத்த மட்டுமே உதவும் என்பதால், வலி தொடர்ந்து நீடித்தால் உடனடியாகப் பல் மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெறுவது அவசியமாகும்.