உத்திரபிரதேசம் மாநிலத்தில் கணவனை கொன்று புதைத்து விட்டு மனைவியின் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷிவ்பீர் என்பவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இதனிடையே கடந்த அக்டோபர் மாதம் ஷிவ்பீர் மாயமான நிலையில் அக்கம் பக்கத்தினர் கேட்டபோது லட்சுமி தனது கணவர் வெளியூருக்கு வேலைக்கு சென்று விட்டதாக கூறியுள்ளார். இருந்தாலும் கணவர் குடும்பத்தினருக்கு லட்சுமி மீது சந்தேகம் இருந்ததால் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் தன்னுடைய கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும் லட்சுமிக்கு அவரது 20 வயது மருமகனுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதற்கு கணவர் தடையாக இருந்ததால் அவரை கொலை செய்ய முயற்சி செய்து அவரை புதைத்ததாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய லட்சுமி மற்றும் அவரது மருமகனை கைது செய்துள்ள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ள தொடர்புக்காக கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…