பீகாரின் சீதாமர்ஹி மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்றுகள் ஆபத்தான அளவில் அதிகரித்து வருவது உள்ளூர் சுகாதார அமைப்பில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட மருத்துவமனையின் ART மையத்தின் தரவுகளின்படி, கிட்டத்தட்ட 7,400 HIV-பாசிட்டிவ் நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர், இதில் பெற்றோரிடமிருந்து வைரஸ் தொற்றிய 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடங்குவர். சீதாமர்ஹியில் எச்.ஐ.வி பாதிப்பு அதிகமாக இருப்பதற்குக் காரணம், அங்கு அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (Migrant workers) இருப்பதுதான் என்று சுகாதார அதிகாரிகள் நம்புகின்றனர். வேலைக்காகப் பிற மாநிலங்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள், அங்குத் தொற்றுக்கு ஆளாகித் திரும்பி வரும்போது தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்றைப் பரப்புகின்றனர்.
தொற்றைக் கண்டறியவும் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாகப் புலம்பெயர்ந்தோர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள் (Counselling and Testing Centres) நிறுவப்பட்டுள்ளன. மேலும் சுகாதாரத் துறை எச்.ஐ.வி/எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. எச்.ஐ.வி பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பான நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர்
