பள்ளி வளாகத்தில் பயங்கரம்…! அதிவேகமாக வந்த கார் மோதி 4 வயது சிறுமி இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on பங்குனி 25, 2026

Spread the love

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கார் மோதி விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவ யாழினி என்ற நான்கு வயது சிறுமி தனியார் பள்ளி வளாகத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த கார் மோதி சிறுமி உயிர் இழந்தார்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் உறவினர்கள் மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.