சேலம் மாவட்டம் சின்னனூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(29). இவர் மின்சாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி சதீஷ்குமார் தனது பெரியம்மாவின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக சின்ன திருப்பதி கூட்டுறவு சொசைட்டி அருகே சென்றார். பின்னர் நள்ளிரவு நேரம் சதீஷை காணவில்லை என அவரது தாய் மலர் கொடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் ஒரு ஸ்டார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் ஆம்னி காரில் வந்து சதீஷ்குமாரை கடத்தி சென்றது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்த போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது சதீஷ்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார்.
பின்னர் போதையில் நடுரோட்டில் நின்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். அந்த சமயம் ரவுடி மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகளான மற்றொரு மணிகண்டன் மணிவண்ணன், கண்ணன் ஆம்னி காரில் வந்தனர். அவர்களை வழிமறித்து காரணமே இல்லாமல் சதீஷ் வம்பு இழுத்ததாக தெரிகிறது. இதனால் கோபத்தில் அவர்கள் சதீஷ்குமாரை கடத்தி சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர்.
உடனே அவர் இறந்து விட்டதால் காவேரி ஆற்றில் உடலை வீசி சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுமார் இரண்டு நாட்களாக தீவிர தேடுதலில் ஈடுபட்டு சதீஷ்குமாரின் உடலை போலீசார் மீட்டனர். அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
