தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை ஆட்சியை கைப்பற்ற பல வியூகங்களை வகுத்து வருகின்றது. அதேசமயம் தனக்கு எதிராக கட்சியில் குரல் கொடுப்பவர்களை ஈபிஎஸ் பாரபட்சம் இல்லாமல் நீக்கி வருகின்றார். சமீபத்தில் கூட மீண்டும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் மொத்தமாக கட்சியிலிருந்து தூக்கி வீசப்பட்டார்.
இப்படி அடுத்தடுத்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தற்போது வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு ஒழுங்குமுறை குறையும் வகையில் நடந்து கொண்டதாலும், கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கட்சி கட்டுப்பாட்டை மீறி கலங்கமும் அவ பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மண்டபம் பேரூராட்சி செயலாளர் சீமான் மரைக்காயர், மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலாளர் சீனி காதர் மொய்தீன், மாவட்ட மீனவர் பிரிவு இணைச்செயலாளர் பக்கர், மண்டபம் பேரூராட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவை இணைச் செயலாளர் ஹமீது அப்துல் ரகுமான் மரைக்காயர் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
இதனால் கட்சி உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். செங்கோட்டையனை தொடர்ந்து இந்த நீக்கம் புதிய பரபரப்பு கிளப்பி உள்ளது.
