தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடந்து முடிந்தது. இரண்டாவது மாநில மாநாடு நேற்று முன்தினம் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ரேம்ப் வாக்கில் நடந்து வந்து தொண்டர்களை உற்சாகப்படுத்திய படி மாநாட்டுக்கு வருகை தந்தார். இதனையடுத்து மாநாட்டில் பேசிய விஜய் தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என திட்டவட்டமாக மீண்டும் உறுதிப்படுத்தினார். அரசியல் கட்சிகளை நேரடியாக விமர்சித்து அரசியலில் தனது நிலைப்பாட்டை கூறினார். விஜயின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 3-வது மாநாடு கோவையில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது கொங்கு மண்டலத்தில் அதிமுக, திமுக மற்றும் பாஜக செல்வாக்காக உள்ளதால் அதனை தகர்க்க விஜய் அங்கு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேதிகள் குறித்த முடிவு இறுதியாகவில்லை என்றாலும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இந்த மாநாடு நடைபெறலாம் என்றும் சொல்லப்படுகிறது.
