சற்றுமுன் சோகம்: படகு கவிழ்ந்து 38 பேர் பலி.. பெரும் துயரம்…!!

By Soundarya on தை 14, 2026

Spread the love

இந்தோனேசியாவின் பாலி தீவுப் பகுதியில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் நெல் அறுவடைப் பணிகளை முடித்துவிட்டுத் திரும்பிய தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற அந்தப் படகு, எதிர்பாராதவிதமாகப் பாறையில் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிகிறது.

இந்தக் கோர விபத்தில் 38 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்புப் படையினரால் மீட்கப்பட்ட அவர்களது உடல்களைப் பார்த்து, உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கதறித் துடிக்கும் காட்சிகள் காண்போரை நெஞ்சை உலுக்கச் செய்கின்றன. இந்த விபத்து குறித்து இந்தோனேசிய அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.