அமேசான் நிறுவனம் தனது ஐரோப்பிய தலைமையகமான லக்சம்பேர்க்கில், வரும் வாரங்களில் சுமார் 370 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது. அந்த அலுவலகத்தின் வரலாற்றிலேயே இதுவே மிகப்பெரிய பணியாளர் குறைப்பு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. லக்சம்பேர்க்கில் உள்ள மொத்தம் 4,370 ஊழியர்களில் சுமார் 8.5% பேர் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படுவார்கள்.
அமேசான் நிறுவனம் தனது கவனத்தை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை நோக்கித் திருப்பி வருவதால், இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏற்கனவே அக்டோபர் 2025-ல் உலகம் முழுவதும் 14,000 வேலைவாய்ப்புகளைக் குறைக்கப்போவதாக அமேசான் அறிவித்திருந்தது. அதன் ஒரு பகுதியாகவே தற்போது ஐரோப்பிய தலைமையகத்திலும் இந்த ஆட்குறைப்பு நடத்தப்படுகிறது. தொழில்நுட்ப உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மற்றும் AI-ன் ஆதிக்கம் காரணமாக, முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
