தமிழக அரசியலில் தவெக ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை இழுபறி நீடிக்கும் சூழலில், அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் 47 எம்.எல்.ஏ-க்களில் சுமார் 30 பேர் விஜய்யின் ஆட்சிக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தவெக-வுக்கு ஆதரவு தரத் திட்டவட்டமாக மறுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சூழலில், தனது கட்சி எம்.எல்.ஏ-க்கள் தவெக பக்கம் தாவிவிடாமல் இருக்க, எடப்பாடி பழனிசாமி மீண்டும் புகழ்பெற்ற ‘ரிசார்ட் பார்முலாவை’ கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. எம்.எல்.ஏ-க்களைத் தனித்தனியாகப் பிரித்து ரகசிய இடங்களில் தங்கவைப்பதன் மூலம் கட்சி உடைவதைத் தடுக்கவும், விஜய்யின் ஆட்சியமைக்கும் கனவுக்கு முட்டுக்கட்டை போடவும் அதிமுக தலைமை தீவிரமாக முயன்று வருவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழக அரசியலில் 2017-ம் ஆண்டு அரங்கேறிய கூவத்தூர் அதிரடிச் சம்பவங்கள், சுமார் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது புதுச்சேரி பூரணாங்குப்பம்…
2026-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழவிருக்கும் ராகு-கேது பெயர்ச்சி, ஜோதிட ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி,…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு கடந்த மூன்று நாட்களாக வழங்கப்பட்டு வந்த கான்வாய் வாகனங்கள் (பாதுகாப்பு வாகனங்கள்) திரும்பப்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், அரை நூற்றாண்டு கால அரசியலை தலைகீழாக மாற்றியுள்ளன. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் 108…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், அக்கட்சியின்…
மறைந்த பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் உடல், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகின் முக்கியத்…